ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தவான்: உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (13:53 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷீகர் தவான் விலகியுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சார்பாக விளையாடியவர் ஷீகர் தவான். கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷீகர் தவான் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷீகர் தவான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷீகர் தவான் விளையாடியபோது கைகளில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து விளையாட்டு வீரர் ஷீகர் தவானுக்கு மருத்துவர்கள் 3 நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷீகர் தவான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷிகர் தவான் உலக கோப்பை போட்டிகளிலிருந்து விலகியுள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மறுப்பு: ஆஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்..!

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments