பவுலிங்கில் சொதப்பிய மாதிரி பேட்டிங்கிலும் சொதப்பிய இந்தியா… இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:25 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி ஆடியது. இதில் முனவரிசை பேட்ஸ்மேன்களான கில், ரோஹித் ஷர்மா, கோலி, புஜாரா ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதையடுத்து ஆடிய ரஹானேவும், ஜடேஜாவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 48 ரன்கள் சேர்த்து ஜடேஜா அவுட் ஆனார்.

நேற்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹானே ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments