Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் கைவிடப்பட்ட ஆட்டங்கள் – இந்தியாவுக்காக வந்த ஹெலிகாப்டர்

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (12:58 IST)
நேற்று முடிந்திருக்க வேண்டிய இந்தியா- நியூஸிலாந்து ஆட்டங்கள் மழையின் காரணமாக இன்று விட்ட இடத்திலிருந்து தொடரும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னரும் பல ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டிருக்கின்றன.

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- இலங்கை மோதியது. ஆட்டம் தொடங்கி 2 பந்துகளில் இந்தியா 1 ரன் பெற்றிருந்தபோது மழைபெய்ய தொடங்கியது. சில மணி நேரங்களில் மழை நின்றதும் மைதானம் ஈரமாக இருந்தது. உலக கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக அப்போதுதான் ஹெலிகாப்டரை பயன்படுத்தி மைதானத்தை காய வைத்தார்கள்.

பிறகு 20 ஓவராக குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு முடிவில்லை என அறிவிக்கப்பட்டது.

அதேபோல 1999ல் ஜிம்பாப்வே- நியூஸிலாந்து ஆட்டத்தின் போதும் நடந்தது. ஜிம்பாப்வே 50 ஓவர்களுக்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களம் இறங்கியது நியூஸிலாந்து. 15 ஓவரில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு சில காரணங்களால் ஆட்டம் கைவிடப்பட்டு முடிவில்லை என அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments