Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பை வென்றால்தான் தோனி அடுத்த ஐபில்-ல் விளையாடுவாரா?

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (23:13 IST)
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2022 15 வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ஒரு அணியானது 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியுமென பிசிசிஐ விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதில், 3 இந்திய வீரர்களுடன் 1 வெளிநாட்டு வீரர் அல்லது 2 வெளிநாட்டு வீரர்கள், 2 இந்திய வீரர்களை ஒரு தக்க வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக 2 அணிகள் இணைய உள்ளன. அதற்கான டெண்டர் கோரும் பணிகள் அடுத்த மாதம்` தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் அணிகள் இறுதி செய்யப்படும் அதானி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் புதிய அணிகளை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சென்னை அணியின் வீரர், சுரேஷ் ரெய்னா உருக்கமாகப் பேசியுள்ளார், அதில், நடப்பு-2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி சேம்பியன் பட்டம் வென்றால் அடுத்த ஆண்டும் தோனியிடம் விளையாடும்படி வலியுறுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments