ரெய்னாவுக்கு பதில் யார் ? சி எஸ் கே வீரர்கள் குழப்பம்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (10:01 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் யாரை அணி நிர்வாகம் தேர்வு செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த முடியாத சூழலில் அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு ஐபிஎல் அணி வீரர்கள் அமீரகம் சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான சுரேஷ் ரெய்னா திடீரென போட்டிகளில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரெய்னா விளையாடாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள அவருக்கு பதில் யாரை அணி நிர்வாகம் களமிறக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments