Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்தியாவுடன் தோற்ற இரவு சாப்பிடக்கூட இல்லை’ - வங்கதேச கேப்டன் மோர்தஸா

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (18:08 IST)
இந்தியாவுடனான போட்டியில் தோற்ற பிறகு அன்று இரவு சாப்பிடக்கூட இல்லை என்று வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரஃபே மோர்தஸா கூறியுள்ளார்.
 

 
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
 
இதில் கொடுமை என்னவென்றால், கடுமையாக போராடிய வங்கதேச அணி வெற்றிபெற கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், தனது விடுமுறையை செலவழிப்பதற்காக காஷ்மீர் சென்றுள்ள மோர்தஸா, அங்குள்ள உள்ளூர் இளைஞர்களிடம் உரையாடுகையில், “நாங்கள் அந்த தோல்வியால் உண்மையிலேயே நொந்துபோய் விட்டோம். நாங்கள் யாரும் இரவு உணவைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.
 
தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இந்தியாவுடனா அந்த போட்டியில் தோற்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

Show comments