Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதியை மீறினாரா விராட் கோலி… பிசிசிஐ எச்சரிக்கை?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (19:04 IST)
இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிட்னெஸ் ஃப்ரீக்காக இருக்கும் கோலி, தன்னுடைய உடலைப் பேணுவதில் ஆர்வமாக இருக்கிறார். தன்னுடைய உடல் பயிற்சி வீடியோக்களை அடிக்கடி சமூகவலைதளங்களில் பதிவிட்டு இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான உடல் தகுதி தேர்வான யோ யோ டெஸ்ட் தேர்வில் கலந்துகொண்டு 17.2 புள்ளிகள் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். ஆனால் பிசிசிஐ விதிகளின் படி யோ யோ டெஸ்ட்டின் முடிவை வெளியில் சொல்லக் கூடாது என்பது பிசிசிஐ விதிமுறைகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. அதனால் விதியை மீறி செயல்பட்ட கோலிக்கு பிசிசிஐ தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments