Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

vinoth
திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:22 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பயிற்சியின் போது விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக பந்துகளை அடித்துள்ளார். அப்படி அவர் அடித்த சிக்ஸ் ஒன்று மைதானத்தின் ஓய்வறைய சுவரை பதம் பார்த்துள்ளது.

இது சம்மந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அதனால் இந்த தொடரில் இருந்தாவது அவரின் டெஸ்ட் ஃபார்ம் மீண்டும் வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

அடுத்த கட்டுரையில்
Show comments