இன்று ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி! பரபரப்பான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்!

Prasanth K
ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:50 IST)

13வது ஐசிசி மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் பரபரப்பாக நடந்து வருகின்றது.

 

இதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது வெற்றிக்காக ஆர்வமாக காத்திருக்கிறது. 

 

அதேசமயம் பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியிலாவது வெல்ல வேண்டும் என முனைப்புடன் உள்ளது.

 

ஆனால் மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 11 முறை எதிர்கொண்ட பாகிஸ்தான் இதுவரை ஒருமுறை கூட வெல்லவில்லை என்பதே வரலாறு. சமீபத்தில் ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி செய்தது ஆண்கள் அணி. அப்படியான ஒரு பதிலடியை இன்று மகளிர் அணியும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments