“தோனி என்னைக் கேப்டன் ஆகவேண்டாம் என்றார்..” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:28 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன.

இந்நிலையில் 2016 -2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட போது குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அதன் பிறகு அவருக்கு பல அணிகளில் இருந்து கேப்டன்சி வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அதை தோனியின் வார்த்தைக்காக மறுத்ததாகவும் அவர் ரகசியம் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “ தோனி என்னிடம் நீ எங்கேயும் செல்லவேண்டாம். நான்தான் கேப்டன். நீ என் துணைக் கேப்டன்” எனக் கூறியதாக ரெய்னா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு: கடைசி போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் வருத்தம்..

அடுத்த கட்டுரையில்
Show comments