Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் அவர்களுக்காக நிறைய விளையாடி கோப்பைகளை வெல்ல உதவியுள்ளேன்” –சிஎஸ்கே தன்னை எடுக்காதது குறித்து ரெய்னா!

vinoth
திங்கள், 22 ஏப்ரல் 2024 (08:01 IST)
சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக விளையாடுவதில் இருந்து அவர் 2020 ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தார். இதையடுத்து சில உள்ளூர் டி 20 லீக் போட்டிகளில் அவர் விளையாடி வந்தார்.

சி எஸ் கே அணியில் தோனியின் தளபதியாக இருந்தவர் ரெய்னா. சொல்லப்போனால் தோனியை விட பேட்டிங்கில் அதிக பங்களிப்பு செய்தவர் ரெய்னாதான். அவரை ரசிகர்கள் சின்னத் தல என்று செல்லமாக அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததது.

அதனால் அவரை ரெய்னாவை சிஎஸ்கே அணி தக்கவைக்கவில்லை. அதன் பின்னர்தான் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் சிஎஸ்கே அணி தன்னை ரிடெயின் செய்யாதது பற்றி பேசியுள்ள ரெய்னா “அவர்களுக்காக நான் நிறைய போட்டிகளில் விளையாடி கோப்பையை வெல்ல உதவி செய்துள்ளேன். அவர்கள் மேல் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments