Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.. ரோஹித் ஷர்மாவுக்கு கவாஸ்கர் அறிவுரை!

vinoth
திங்கள், 22 ஜனவரி 2024 (10:28 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணைக் கேப்டனாகியுள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். அதில் “இந்த தொடரில் ரோஹித் ஷர்மா பவுலர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என ரோஹித் ஷர்மா நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடினால் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் விளையாடும் வீரர்களுக்கு பாரம் குறையும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments