Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அதிர்ச்சி தோல்வி

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2016 (15:59 IST)
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
 

 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 3 -1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது.
 
இந்நிலையில், இன்று முதல் டி 20 போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் கப்தில் 34 பந்துகளில் 58 ரன்களும், வில்லியம்சன் 42 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் குலசேகரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பின்னர், 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில், வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் 1 ரன்னும் எடுக்கப்பட்டது.
 
3ஆவது பந்தில் குலசேகரா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எலியாட் பந்தில் போல்ட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் கபுகேதரா 17 ரன்களில் ரன் அவுட் ஆகினார்.
 
கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5ஆவது பந்தில்  ரன்னும், கடைசி பந்தில் 4 ரன்களும் அடிக்க இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
 
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments