Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் அணியில் இவர்கள் போல் யாரும் இல்லாததே தோல்விக்கு காரணம்; தென் ஆப்பிரிக்கா கோச்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (19:39 IST)
எங்கள் அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா போன்று அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியுள்ளார்.

 
தென் ஆப்பிக்காவிற்கு எதிரான டி20 போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தோல்வி குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியதாவது:-
 
தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போனது. இதனால் புதிய வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ப தயார் படுத்த முடியவில்லை.
 
பந்துவீச்சில் எங்களுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அனுபவ பந்து வீச்சாளர்களாக உள்ளனர். கடைசி ஓவர்களில் நேர்த்தியாக பந்துவீசி நெருக்கடி தருகின்றனர். எங்களிடம் இவர்கள் போன்று அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments