Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பைனலுக்கு வரவேண்டும்… ஆசைப்படும் பாகிஸ்தான் வீரர்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (17:03 IST)
இந்திய அணி பைனலுக்கு வந்து மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்கவேண்டும் என ஆசைப்படுவதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையின் முதல் இரு போட்டிகளை தோற்ற இந்திய அணி இப்போது வெற்றிப்பாதைக்கு திரும்பி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ‘தனிப்பட்ட முறையில் இந்தியா பைனலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலில் மோதி மீண்டும் பாகிஸ்தான் வெற்றி பெறவேண்டும். அப்படி நடந்தால் அது பிரம்மாண்டமான கிரிக்கெட்டாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments