Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஃப்ரிடியை ரசிகர்கள் மிகவும் இழக்கிறார்கள் - கருத்துக் கணிப்பு தகவல்

Webdunia
சனி, 2 மே 2015 (15:46 IST)
2015 ஐபிஎல்-இல் நாங்கள் ஷாகித் அஃப்ரிடியை நாங்கள் மிகவும் இழக்கிறோம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
8ஆவது ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. சில வீரர்கள் தங்களது நாடு கலந்துகொள்ளும் தேசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடி வருவதால் ஐபிஎல் போட்டியில் விளையாட இயலாமல் இருந்து வருகின்றனர்.
 

 
இந்நிலையில், தனியார் விளையாட்டு இணையத்தளம் ஒன்று 2015 ஐபிஎல்-இல் மிகவும் இழக்கப்பட்ட வீரர் யார் என்ற கருத்துக் கணிப்பிற்கான இணையதள வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் அதிகப்படியான ரசிகர்கள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அஃப்ரிடியை மிகவும் இழப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
இதில் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 128 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில், 43ஆயிரத்து 489 பேர் ஷாகித் அஃப்ரிடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது மொத்த சதவீதத்தில் 31.04 சதவீதம் ஆகும். இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 27ஆயிரத்து 300 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 
இலங்கை வீரர் குமார் சங்ககரா 3ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா 4ஆவது இடத்தையும், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹஸன் 5ஆவது இடத்தையும், நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments