ஆஷஸ் இரண்டாவது போட்டி: முதல் நாளில் அதிரடி காட்டிய ஆஸி. பேட்ஸ்மேன்கள்- திணறிய இங்கிலாந்து பவுலர்கள்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (07:10 IST)
நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. ஆஸி அணிக்கு டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

அரைசதம் அடித்த அவர் ஜோஷ் டங்க் ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாட ஆஸியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.  டிராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸி அணி 339 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்துக்கு எதிராக ஆஸி வீரர்கள் 4 ரன்ரேட்டுக்கு மேல் அடித்து போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments