Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் யார் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை… ரிஷப் பண்ட்டுக்கு ஷாக் கொடுத்த சஞ்சய் கோயங்கா!

vinoth
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (10:14 IST)
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டார். கடந்த ஆண்டு ராகுலுக்கும் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து நடந்த மெஹா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்தது. இதுவரை ஐபிஎப் தொடரில் எந்தவொரு அணியும் இவ்வளவு தொகை செலவு செய்து ஒரு வீரரை ஏலத்தில் எடுத்ததில்லை.

இதனால் லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள சஞ்சீவ் கோயங்கா “எங்கள் அணியின் கேப்டன் யார் என்பது குறித்து இதுவரை யோசிக்கவில்லை. எங்கள் அணியில் நான்கு தலைவர்கள் உள்ளனர். ரிஷப் பண்ட், மார்க்ரம், பூரான் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். அதனால் வியூகம் அமைத்து செயல்படுவதில் சிக்கல் இருக்காது” எனக் கூறியுள்ளார். சஞ்சீவ் கோயங்கா இவ்வாறு பேசியிருப்பது ரிஷப் பண்ட்டுக்கு பெரிய ஷாக்காக அமைந்திருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

அடுத்த கட்டுரையில்
Show comments