சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்… விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு!

vinoth
சனி, 3 மே 2025 (07:55 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் அவர் ஐபிஎல் போட்டிகளில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். 1500 ரன்கள் சேர்க்க அவர் எடுத்துக்கொண்ட இன்னிங்ஸ்கள் 35 தான். இதன் மூலம் குறைவான இன்னிங்ஸ்களில் 1500 ரன்களைக் கடந்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சுதர்சன், ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று தற்போதே ஆருடங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments