பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

vinoth
வெள்ளி, 20 ஜூன் 2025 (08:30 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வழக்கமாக இந்தியா இங்கிலாந்து தொடர் பட்டோடிக் கோப்பை என்று அழைக்கப்படும்.  ஆனால் தற்போது அந்த தொடருக்கு ‘டெண்டுல்கர்- ஆண்டர்சன்’ கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பட்டோடியின் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள சச்சின் “இந்த தகவல் வெளியான போது நான் முதலில் பட்டோடி குடும்பத்தினரைதான் தொடர்பு கொண்டேன். இந்த தொடரில் பட்டோடி பெயர் நீடித்திருக்க என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறினேன். அதன் பின்னார் பிசிசிஐ, ஜெய்ஷா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் என்னுடைய யோசனையைத் தெரிவித்தேன். அவர்களும் அதையேற்று கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தனர்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments