Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போது இருக்கும் விதிகள் இருந்திருந்தால்… நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சச்சின் &கங்குலி!

Webdunia
புதன், 13 மே 2020 (07:32 IST)
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடிகள் பட்டியலில் சச்சின் மற்றும் கங்குலி ஜோடி முதல் இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தனது 'டுவிட்டர்' பக்கத்தில் இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின்-கங்குலி என அறிவித்துள்ளது. இந்த ஜோடி ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து 8,227 ரன்கள் (சராசரி 47.55) எடுத்தனர். இது குறித்து சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நமது சிறந்த தருணங்களை இது நினைவுபடுத்துகிறது தாதா. நாம் விளையாடிய போது இப்போது இருக்கும் விதிகள் (உள் வட்டத்தில் நான்கு பீல்டர்கள் மற்றும் 2 புதிய பந்துகள்) இருந்திருந்தால் நாம் மேலும் எவ்வ/லவு ரன்கள் சேர்த்திருப்போம்?’எனக் கேட்க, அதற்கு தாதா ’ எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக எடுத்திருப்போம். முதல் ஓவரில் இருந்தே 'கவர் டிரைவ்' அடித்து பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் இருந்திருக்கும்’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments