Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட் செய்யும்போது மைதானத்தில் இருந்து வெளியேறிய ரோஹித் ஷர்மா… என்ன ஆச்சு?

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:54 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியின் போது முதுகு பிரச்சனை காரணமாக வெளியேறினார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென முதுகுப் பிரச்சனை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக் அணியின் பிஸியோ வந்து அவரோடு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியேறினார்.

போட்டி முடிந்த பின்னர் முதுகுப்பிரச்சனை குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “இப்போது பரவாயில்லை.அடுத்த போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதற்குள் முழுவதுமாக குணமாகிவிடுவேன் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் சி எஸ் கே… தோனி முன்னாடி வந்தும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments