ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (20:54 IST)
இந்திய கிரிக்கெட் அணி, 212   ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும்  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன், விராட் கோலி டக் அவுட், சிவம் டுபே 1 ரன், சஞ்சு சாம்சன் 0 ரன்னுடன் அவுட்டாகினர்.

எனவே  பொறுப்பை உணர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 69 பந்துகளில்  சதம் கடந்து, 121 ரன்கள் குவித்தார்.    அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த, ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 39 பந்துகளுக்கு 69  ரன்கள் குவித்தார்.

துவக்க வீரர்கள் 4 பேரை இழந்து திணறிய நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சிங்கு சிங்கின் திறமையான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி, 20  ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212   ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தரப்பில், அஹ்மது 3 விக்கெட்டும், ஓமர்ஷாய் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்னும் சிறிது  நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments