பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்கவுள்ள ரோஹன் ஜெட்லி?

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (07:39 IST)
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம்.

இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐசிசி தலைவரானவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜெய்ஷா. அவருக்கு வயது 35 தான்.

அவர் ஐசிசி தலைவர் ஆகியுள்ளதால் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லியை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இப்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுததடுத்து பாஜக பிரமுகர்களின் வாரிசுகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முக்கியப் பதவிகளை ஏற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments