டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் நான் விடுவிக்கப்பட காரணம் பணம் இல்லை… ரிஷப் பண்ட்டின் பதிவு!

vinoth
செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:32 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டு சஞ்சய் பாங்கர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணிக்கு ஒரு இந்திய வீரரைப் பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என்ற முடிவால்தான் பாண்டிங் விடுவிக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தக்கவைக்கப் படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு அவர் கேட்ட தொகை டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் தர முடியாததால்தான் அவர் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ரிஷப் பண்ட் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் “நான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது பணம் இல்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments