எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (07:00 IST)
ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 புள்ளிகள் பெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மூன்றாவது அணியாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நான்காவது அணியாக தேர்வு பெற சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஐதராபாத் அணி ப்ளே ஆஃப்க்கு சென்று விட்ட நிலையில் 18 ஆம் தேதி சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதும் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக அமைய உள்ளது. இந்த போட்டியை சி எஸ் கே அணி வெற்றி பெற்றால் நேராக ப்ளே ஆஃப்க்கு சென்றுவிடும். ஆர் சி பி அணி ப்ளே ஆஃப்க்கு செல்ல வேண்டுமென்றால் சி எஸ் கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் வெற்றி பெறவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிங்கு சிங்கிற்கு உபியில் அரசு பணி.. நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர் யோகி..!

மறைந்த பின்னர் ஷேர் வார்னே குடும்பத்திற்கு கிடைக்கும் ரூ.450 கோடி.. ராயல் ராஜஸ்தான் அணி ஏன் கொடுக்கிறது?

ஐபிஎல் தொடங்க இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது.. திடீரென மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட ராஜஸ்தான் அணி..!

3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முக்கிய வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திட்டம் என்ன?

27 வயதான மாடல் அழகியுடன் 15 வயது ரொனால்டோ மகன் டேட்டிங்? புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments