Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஆஸி ஜெயிக்கும்னு நிறைய பேர் சொல்றாங்க… ஆனா இதுதான் நடக்கும்’- ரவி சாஸ்திரி கணிப்பு

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (14:45 IST)
ஐபிஎல் ஜுரம் அடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் வெல்வதற்கு ஆஸி அணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் வானிலையும், போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதான வானிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இது ஆஸி அணிக்கு பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்திய அணியோ கடும் கோடையில் ஐபிஎல் விளையாடிவிட்டு இப்போது குளிர் பிரதேசமான இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால் வானிலை மாற்றத்தை வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது.

ஆனால் இதுபற்றி வேறு விதமாக பேசியுள்ளார் முனனாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவர் இதுபோன்ற புறக்காரணிகள் ஒருபுறம் இருந்தாலும் போட்டியன்று எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என கணித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments