Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சகர்களை கிழித்தெடுத்த ரவி சாஸ்திரி!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (12:40 IST)
இந்தியா அணி தோல்வியடையும் போது விமர்சிப்பவர்கள் தற்போது எங்கே போனார்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அனி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு விமர்சகர்கள் அணியின் தேர்வு சரியில்லை என விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற புள்ளி கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
 
இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

விமர்சகர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான். வெற்றிப்பெற்றால் எதிர் அணி சரியாக விலையாடவில்லை. இலங்கை அணியுடன் விளையாடி வெற்றி பெற்றபோது இலங்கை அணி பலவீனமாக இருந்ததது. தென்னாப்பிரிக்கா அணியுடன் வெற்றி பெற்றபோது, அவர்கள் சரியான பார்மில் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். அணியை அதன் போக்கில் விடுவதே நல்லது என்பதை மறக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments