“அதை நினைத்தால் இப்பவே தலைகால் புரியல…” ஐபிஎல் ஏலம் குறித்து ரச்சின் ரவிந்தரா நெகிழ்ச்சி!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:20 IST)
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் கவனம் ஈர்த்த இளம்  வீரர்களில் ஒருவர் நியுசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா. 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 25 வயது நிரம்புவதற்குள் அதிக ரன்கள் அடித்த சாதனை சச்சின் வசம் இருந்தது. 1999 உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்து அவர் இந்த சாதனையை படைத்தார். நேற்று ரச்சின் ரவீந்திரா அடித்த ரன்கள் மூலம் இந்த இலக்கை தாண்டி சென்று சச்சின் சாதனையை முறியடித்தார்.

இதையடுத்து இன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 1.80 கோடி ரூபாய்க்கு மட்டும் ஏலத்தில் எடுகப்பட்டார். அவரை ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சி எஸ் கே அணி எடுத்துள்ளது.

சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளது குறித்து பேசியுள்ள ரச்சின் ”முதல் முறையாக நான் ஐபிஎல் விளையாட போகிறேன். சிறந்த வீரர்களான தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் இருக்கும் சென்னை அணியில் விளையாட போவதை நினைத்தால் இப்போதே பெருமையாக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் சி எஸ் கே அணிக்காக விளையாடும் நியுசிலாந்து வீரர்கள் என்னிடம் கூறியுள்ளனர். சிஎஸ்கே ரசிகர்களை கண்டிப்பாக நான் மகிழ்விப்பேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments