Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டிகள் தொடங்கும் முன்பே 8 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

Webdunia
வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (12:46 IST)
அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களுக்கு, பாதுகாப்பு விதி முறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை (14-02-15) முதல் 11ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால், பங்கேற்கவுள்ள 14 அணிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.

 
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேரும் இரவில் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு 45 நிமிட நேரம் தாமதமாக ஓய்வறைக்குத் திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அவர்கள் மீண்டும் இதே போன்று விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஒழுக்க விதிமுறைகளை மிறியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதோடு தாங்கள் அதே மாதிரியான தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

பாகிஸ்தான் தனது பயிற்சி ஆட்டம் இரண்டிலும் (பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரும் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை அடிலெய்டில் எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரடி, “இந்த முறை நாங்கள் வரலாற்றை மாற்றுவோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments