Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவேயை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2015 (08:41 IST)
ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.


 
 
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது.முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 35 ரன்களும், முகமது ரிஷ்வான் 33 ரன்களும் எடுத்தனர்.
 
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி, தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும்  பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிமின் மாயாஜால சுழற்பந்தை சமாளிக்க முடியாமல், ஜிம்பாவே அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது.
 
ஜிம்பாவே அணியில் அதிகபட்சமாக சிகும்புரா 31 ரன்களும் ஹேமில்டன் 25 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான  இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments