Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி இன்று உறுதி..! நியூஸி அடியில் வெலவெலத்து போன இலங்கை! – 172 மட்டுமே இலக்கு!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (18:15 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் இலங்கையை 171 ரன்களில் மடக்கியுள்ளது நியூசிலாந்து.



இன்று நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்திற்கு அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசமாகும் என்பதால் நியூசிலாந்து இந்த போட்டியை வெல்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து இலங்கையின் விக்கெட்டுகளை பதம் பார்த்தது. குசால் பெரேரா மட்டுமே 51 ரன்களை அடித்தார். மற்றவர்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் 46வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அதை தொடர்ந்து 172 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து 4 ஓவர்களிலேயே 20 ரன்களை தாண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் குறைந்த ஓவர்களிலேயெ டார்கெட்டை முடித்து நியூசி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

அடுத்த கட்டுரையில்
Show comments