Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது : முத்தையா முரளீதரன்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (18:35 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்து தள்ளியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன்.


 

 
இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி, கடந்த இரண்டு வாரங்களாக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ள சால்ட்லேக் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
அதில், முத்தையா முரளீதரன் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார். அப்போது அங்கிருந்த இளம் வீரர்கள், முரளீதரனிடம் சில கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார்.
 
ஒரு வீரர் விராட் கோலியை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முரளீதரன் “ விராட் கோலை பார்ஃம் எனும் கனவின் நடுவில் இருக்கிறார். இந்த ஐ.பி.எல். தொடரில் மட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான வகையில் விளையாடி வருகிறார். இந்தியாவிற்காகவும், ஐ.பி.எல். தொடருக்காகவும் ரன்களை குவித்து வருகிறார். அவரை யாரும் தடுக்க முடியாது. அவரது பார்ஃம் என்னை வியக்க வைக்கிறது” என்று கூறினார்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments