Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய முயற்சி - அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (16:05 IST)
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சூதாட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது.
 
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, கொலை குற்றச்சாட்டின் பேரில் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா ஒருவன் ஸ்ரீசாந்தை கொல்ல முயன்றதாக அவரது மைத்துனரும் பிரபல மலையாள பின்னணி பாடகருமான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகர் பாலகிருஷ்ணன், “ஸ்ரீசாந்துக்கும் கிரிக்கெட் சூதாட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என எங்கள் குடும்பம் முழுமையாக நம்புகிறது. ஏதோ காரணத்தால் பின்னப்பட்ட சதி வலையில் அவர் தள்ளப்பட்டார். இவ்விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
 
திகார் சிறையில் அவர் இருந்தபோது, கொலை வழக்கு கைதியாக அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா ஒருவன் கதவின் தாழ்ப்பாளை கூர் தீட்டி, கத்தி போல் தயாரித்தான். அதை கொண்டு ஸ்ரீசாந்தை அவன் குத்திக்கொல்ல முயன்றான்.
 
ஸ்ரீசாந்த் அந்த மன அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. இந்த சம்பவம் சிறைக்குள் நடந்தது என்பதால் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments