Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

Prasanth Karthick
வெள்ளி, 24 மே 2024 (12:22 IST)
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக இருந்து வரும் தோனி தனது வெற்றிக்கு பயம்தான் காரணம் என கூறியுள்ளார்.



இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி தற்போது அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு கோப்பை வெல்ல சென்னை அணி கடும் முயற்சிகள் எடுத்த நிலையில் நூல் இழையில் ப்ளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது.

எனினும் பல போட்டிகளில் கடைசி ஓவர்களில் தோனி இறங்கி அடித்த சிக்ஸர்கள் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ப்ளேயர்கள் இல்லாவிட்டாலும் அணியை ஒரு ஒழுக்கத்துடன் வழிநடத்தும் தோனியின் பாங்கு பலராலும் பெரிதும் புகழப்படுகிறது. இந்நிலையில் தனது வெற்றியின் ரகசியம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் தோனி.

ALSO READ: ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

அதில் அவர் “பயம் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. எப்போது உங்களுக்கு அந்த பயம் இருக்க வேண்டும். எனக்கு பயம் இல்லாமல் இருந்தால் நான் ஒருபோதும் தைரியமாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை பயமும், அழுத்தமும் தான் எனக்கு மிகவும் முக்கியமானது. அவைதான் எல்லாவற்றையும் யோசிக்க வைத்து சரியான முடிவுகளை எடுக்க எனக்கு பெரிதும் உதவுகிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments