Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வெற்றி

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2015 (06:55 IST)
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 
 
இந்தியா -  தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்றது.
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்கம் முதலே தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய  இந்திய  அணியின் முன்கள வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நடையை கட்டினர்.  
ஒரு புறம் விக்கெட் சரிய மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தோனி 92 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்   9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 43.4 ஓவரின் போது தென் ஆப்பிரிக்க அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments