Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும்: மெக்ராத்

Webdunia
புதன், 19 நவம்பர் 2014 (12:45 IST)
டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கவுள்ள இந்தியா-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் இந்தியா படுதோல்வி அடையும் என ஆஸ்திரேலிய  முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் வருகிற டிசம்பர் 4 அன்று தொடங்கி ஜனவரி 7 வரை நடக்கிறது. மேலும் இரு பயிற்சி ஆட்டங்களிளும் இந்திய அணி விளையாடவுள்ளது.
 
இந்நிலையில் போட்டி குறித்து ஆஸ்திரேலிய  முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறுகையில், மைக்கேல் கிளார்க் காயம் அடைந்துள்ளது சற்று வருத்தமானதுதான் என்றாலும் ஆஸ்திரேலிய அணி வலுவாகவே உள்ளது.
 
கடந்த முறை நடந்த டெஸ்ட் தொடர் போலவே இம்முறையும் 4–0 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்திய அணி ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் வலுவான அணியாக திகழ்கிறது. எனினும் டெஸ்ட் போட்டிகளில் இந்நிலையை இந்திய அணி எட்டவில்லை. மேலும் இங்குள்ள பவுன்ஸ் ஆடு களத்தில் இந்திய அணி திணறுகிறது என கூறினார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments