Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களை எச்சரித்தேன்’ - மனம் திறக்கும் சோயப் அக்தர்

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (22:08 IST)
சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை நான் எச்சரித்தேன் என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என எல்லோரலும் அழைக்கப்படுபவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இவர், வேகத்திற்கு மட்டுமல்லாமல் தனது அதிரடி கருத்துக்களாலும் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுபவர்.
 
இந்நிலையில், சோயப் அக்தர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ”1996ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் சூதாட்டம் வெகு அளவில் வியாபித்து இருந்தது. ஆனால், அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டேன்.
 
பாகிஸ்தான் வீரர்களின் ஓய்வு அறையின் சூழல் மிகவும் விசித்திரமாக இருந்தது. நம்புங்கள், வீரர்களின் ஓய்வு அறை மோசமான சாத்தியங்களை கொண்டிருந்தது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் வட்டத்தில் இருந்து முற்றாக நான் விலகி இருந்தேன்.
 
மேலும், என்னுடைய சக வீரர்களை ஒருமைப்பாட்டுடனும், நேர்மையுடனும் விளையாடும்படி எச்சரிக்கை செய்தேன். அத்துடன் சூதாட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்ட முகமது ஆமிரையும் நான் எச்சரித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments