Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.சி.சி.ஐ தலைவராகிறார் ஷஷாங்க் மனோகர்

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (07:28 IST)
ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மாரடைப்பால் கொல்கத்தாவில் உள்ள பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 

 
 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் ஜக்மோகன் டால்மியா  கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.ஜக்மோகனின் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 
 
இந்தக் கூட்டத்தில் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவராக இருந்த  ஷஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் என்.ஸ்ரீநிவாசனின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments