“சைமண்ட்ஸுக்கு முதலுதவி செய்தேன்”… விபத்து இடத்துக்கு முதலில் சென்ற நபர் சொன்ன தகவல்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (09:06 IST)
விபத்தில் மறைந்த சைமண்ட்ஸுக்கு முதலுதவி செய்ததாக விபத்து நடந்த இடத்துக்கு சென்ற நபர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னதாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து உருண்டதாகவும், இதனை அடுத்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காருக்குள்ளேயே உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விபத்துப் பகுதிக்கு அப்பகுதியில் வசிக்கும் நபரான வெய்லன் டவுன்சன் என்பவர்தான் அப்பகுதிக்கு முதலில் சென்று சைமண்ட்ஸைப் பார்த்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள அவர் “சத்தம் கேட்டு நான் அங்கு சென்றேன். காரில் இருந்து அவரை வெளியே இழுக்க முயன்றேன். அவருக்கு CPR செய்தும் பார்த்தேன். ஆனால் அவர் அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையில் தற்போது வரை கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments