மலிங்கா அந்தர் பல்டி.. டி20-களில் விளையாட விருப்பம்

Arun Prasath
வியாழன், 21 நவம்பர் 2019 (09:44 IST)
இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20-களில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்பு கடந்த ஜூலை மாதம், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனை தொடர்ந்து வருகிற 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலககோப்பை டி20 தொடருடன் தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக மலிங்கா அறிவித்தார். இந்நிலையில் தற்போது அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார்.

இது குறித்து மலிங்கா “டி 20 போட்டிகளில் 4 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்பதால், எனது திறமையை கொண்டு இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளில் என்னால் விளையாட முடியும்” என கூறியுள்ளார். இதன் மூலம் லசித் மலிங்கா அடுத்த இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளிள் விளையாடுவார் என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

இன்னும் மக்கள் ஏன் இதிலிருந்து வெளிவரவில்லை? விராத் கோலி முன்னாள் காதலியின் பதிவு வைரல்..

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: சுப்மன் கில், பும்ரா இல்லையா? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

6 போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட்.. சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி போகிறதா?

அடுத்தடுத்து தவறான முடிவெடுத்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்.. கஜினியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments