Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையை முந்திய விராட் கோலி !!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:49 IST)
சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். 

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதனைத்தொடர்ந்து 33 ரன்கள் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சிலும் சொதப்பியதால் 81 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை (22 போட்டிகள்) பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் தோனி 21 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments