அஸ்வின் என் ஊரில் அதை செய்யவேண்டும் என்பதே விதி- ஜடேஜா கருத்து!

vinoth
வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:32 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் நாளைய போட்டியில் முக்கியமான ஒரு மைல்கல் சாதனையை எட்ட உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 499 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஜடேஜா “அஸ்வின் மூன்றாவது போட்டியில் அவரின் 500 ஆவது விக்கெட்டை எடுப்பார். எனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் அவர் அந்த சாதனையை படைக்கவேண்டும் என்பது விதி. அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments