ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா…? அதிர்ச்சி முடிவு எடுக்க என்ன காரணம்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (10:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்கு இப்போது இருக்கும் தரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவிந்தர ஜடேஜா. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் ஜடேஜா கிங். அதனால் அடிக்கடி அவர் காயப்படுவதும் உண்டு. சமீபத்தில் நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முழங்கையில் காயமடைந்தார். இதையடுத்து அவர் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் நீண்ட கால நோக்கில் யோசித்து ஜடேஜா இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments