ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்ததாக வினோதமான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட ஜடேஜா!

vinoth
திங்கள், 13 மே 2024 (06:51 IST)
நேற்று சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியில் சி எஸ் கே அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழுப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அந்த இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டிப்பிடித்து தங்கள் ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் சி எஸ் கே அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சி எஸ் கேவின் இந்த வெற்றியால் ஆர் சி பி, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ ஆகிய அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது. 

இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா நூதனமான முறையில் அவுட் ஆனார். அவர் ரன் எடுக்க ஓடியபோது அவரை ரன் அவுட்செய்ய சஞ்சு சாம்சன் ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்தார். அப்போது பந்து  அவர் மேல் பட்டு திசைமாறியது. இந்நிலையில் அவர் பீல்ட் செய்ய விடாமல் தடுத்ததாக விக்கெட் கேட்டு ராஜஸ்தான் அணியினர் அப்பீல் செய்தனர். மூன்றாவது நடுவரின் முடிவுக்கு சென்ற இந்த விவகாரத்தில் ஜடேஜா அவுட் கொடுக்கப்பட்டார். பந்து சஞ்சு சாம்சன் கைகளுக்கு வருவதைப் பார்த்த ஜடேஜா, வேண்டுமென்ற ஸ்டம்ப்களை மறைத்துக் கொண்டு ஓடியதாக அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments