IPL 2024: கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்.. சிஎஸ்கே புது கேப்டன் இவர்தான்?! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick
வியாழன், 21 மார்ச் 2024 (16:12 IST)
ஐபிஎல் 2024 சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு அணிகளுக்குமான கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இந்த சீசன் அவருக்கு கடைசி சீசன் என பேசிக் கொள்ளப்படுவதால் இதிலும் அவரே கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது,.



ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது தெரியவந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து அணி கேப்டன்களும் ஐபிஎல் ட்ராபியுடன் எடுத்த போட்டோவிலும் ருதுராஜ் கெய்க்வாட்டே இடம் பெற்றுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக தோனியின் கேப்பிட்டன்சிக்காக ஐபிஎல் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், புதிய கேப்டன் ருதுராஜுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments