Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது போட்டியில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றி… தொடரையும் கைப்பற்றியது!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:02 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்கினார்.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்க, பின் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments