Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (18:35 IST)
இந்திய-இலங்கை அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இதில் 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில்,இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில்  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை(17) நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி தொடரை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம் இலங்கை அணியும் இதே நோக்கத்தோடு கடுமையாக போராடுவார்கள். இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments