7 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா… வெற்றியை நோக்கி பங்களாதேஷ்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:53 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தற்போது முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது.

22 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்த பங்களாதேஷ் அணி 227 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் ஆகியோரின் சிறப்பான அரைசதத்தால் 314 ரன்கள் சேர்த்தது. பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 145 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு 64 ரன்கள் தேவை. பங்களாதேஷ் அணி வெற்றிக்கு 3 விக்கெட்கள் தேவை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments