Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆவது உலக கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பு: சவுரவ் கங்குலி

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2014 (13:46 IST)
வரும்  2015 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் 11 ஆவது உலக கோப்பை போட்டி வரும் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், வரும் உலக கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
 
மேலும் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை வரை தோனி கேப்டனாக நீடிக்க வேண்டும். அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை கையாள்வது இந்திய அணிக்கு பெரும் சவாலாக உள்ளது.
 
எனினும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி சிறந்து விளங்குவதால் கவலைகொள்ள அவசியம் இல்லை. மேலும் ஒரு நாள் போட்டிகளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும்.
 
பெரும் எண்ணிக்கையிலான கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இந்திய அணி பூர்த்திசெய்து பெருமை சேர்க்கும் என்று நம்புகிறேன் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு..!

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

Show comments